Asianet News TamilAsianet News Tamil

+2 மாணவியை கெமிஸ்ட்ரி லேபில் வைத்து கற்பழித்த ஆசிரியர்... வீடியோ எடுத்து மிரட்டி சீரழித்த கொடுமை... 4 மாத கர்ப்பம்

அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அந்த பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவியை பள்ளி ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
 

chemistry teacher harassment at chemistry lab
Author
Salem, First Published Sep 4, 2019, 11:46 AM IST

அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அந்த பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவியை பள்ளி ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது வேம்படிதாளம். இங்குள்ள அரசு பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் கடந்தாண்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்தார். அதே பள்ளியில் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் அந்த பள்ளியில் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.

மாற்று திறனாளியான இவர் வேதியியல் பாடம் எடுத்துள்ளார். இதனால், ஆய்வகத்துக்கு மாணவிகளை அடிக்கடி அழைத்து சென்றுள்ளார். அப்படி வெப்படை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியையும் ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு வைத்து அந்த மாணவியை பலவந்தமாக கற்ப்பழித்துள்ளார். மேலும், அப்படி கற்பழிக்கும் சமயத்தில் எடுத்த போட்டோ, வீடியோ எடுத்து வைத்து மிரட்டியே தொடர்ந்து அவரை  அங்கு வைத்து பல நாட்கள் கற்பழித்துள்ளார்.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு இந்த விஷயம் தெரிந்த மாணவியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி போலீசில்  புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அந்த ஆசிரியரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பெற்று தருவதாகவும், புகாரை வாபஸ் வாங்குமாறும் மிரட்டியதாக அனுப்பியுள்ளனர். இதனால் மாணவியின் பெற்றோர் புகாரை வாபஸ் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பள்ளி மாணவி ஒருவர் வெளியில் தகவலை கூறியதால் உயர் கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியபோது பள்ளிக்கு குழந்தைகளை விட வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஏற்கனவே இந்த பள்ளியில் காதல் விவகாரத்தில் மாணவி ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் வற்புறுத்தினர். இதையடுத்து ஆசிரியர் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பாலாஜி மீதான புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்று அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். மேலும் அவரை தேடிய போது கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு அவர் தப்பியோடியது தெரிய வந்தது.

அவரை புஷ்பராணி தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது போல வேறு மாணவிகளையும் பலாத்காரம் செய்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் பாலாஜி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios