Asianet News TamilAsianet News Tamil

அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம்... சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி மாணவர்..!

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

bike accident... youth killed
Author
Tamil Nadu, First Published Sep 9, 2019, 5:56 PM IST

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கேரள மாநிலம் ஆலுவாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டப்பன். இவரது மகன் செபின் (21). அதே பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவரின் மகன் அக்‌ஷய் (21). நண்பர்களான இவர்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஓணம் விழாவுக்காக இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை அக்‌ஷய் அதிவேகமாக ஓட்டினார். 

bike accident... youth killed

அப்போது, வாளையார் காவல் நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பின்னால், வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் செபின் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அக்‌ஷய் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

bike accident... youth killed

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த செபின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios