Asianet News TamilAsianet News Tamil

காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.

cauvery river...6 people death
Author
Tamil Nadu, First Published Apr 23, 2019, 1:23 PM IST

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது. cauvery river...6 people death

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் குளிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் புகைப்படக் கலைஞரான சரவணன் தனது மனைவி, 2 மகள்கள், பக்கத்து வீட்டு சிறுவா்களுடன் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் 6 பேரும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர். cauvery river...6 people death

இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் சரவணன், அவரது மனைவி ஜோதிமணி மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார் சரவணின் மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தாரகேஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios