Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை.. வெளியானது ஜோதிஸ்ரீ துர்காவின் உருக்கமான ஆடியோ..!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி  ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Preparing NEET exam...Madurai student commits suicide
Author
Madurai, First Published Sep 12, 2020, 9:49 AM IST

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதிஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதிஸ்ரீ துர்கா உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Preparing NEET exam...Madurai student commits suicide

பின்னர், அவரது வீட்டை சோதனையிட்ட செல்போனில் ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நான் உன்னை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். அம்மா I am going to miss you என்று கூறியுள்ளார். 

Preparing NEET exam...Madurai student commits suicide

ஏற்கனவே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் மனஉளைச்சல் காரணமாக செப்டம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து  கொண்டார். இந்த சோகம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி உயிரை விட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios