Asianet News TamilAsianet News Tamil

நாளை திருமணத்தை வைத்து கொண்டு.. கல்யாண பொண்ணு செய்ற வேலையா இது..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம். இவரது 2-வது மகள் வினோதினி (26). பட்டதாரியான இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். இவரது விருப்பம் இல்லாமல் பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், குடும்பத்தினர் அவரை சமரசம் செய்து வந்தனர்.

madurai Young woman suicide...police investigation
Author
First Published May 24, 2023, 1:58 PM IST

நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம். இவரது 2-வது மகள் வினோதினி (26). பட்டதாரியான இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். இவரது விருப்பம் இல்லாமல் பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், குடும்பத்தினர் அவரை சமரசம் செய்து வந்தனர்.

இதையும் படிங்க;- கடவுளே இது மாதிரி ஒரு கொடுமை யாருக்கு நடக்கக்கூடாது.. கணவன் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பலியான மனைவி.!

இந்நிலையில். கடந்த 7-ம் தேதி பெற்றோர் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியே சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி விஷம் குடித்தார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் மகள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து, அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வினோதினி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களாக வினோதினி மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்ததும் பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. 

இதையும் படிங்க;- குட்நியூஸ்.. அரசு பேருந்துகளில் இனி 5 வயது குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்..!

இதனால், திருமணம் வேண்டாம் என்று கூறிவந்ததும் தெரியவந்தது. நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios