Asianet News TamilAsianet News Tamil

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் ஆப்பு... உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு..!

அரசுப்பணிகளில் இருப்போர், 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

government employees 2nd marriage...madurai high court
Author
Tamil Nadu, First Published Jul 26, 2019, 2:55 PM IST

அரசுப்பணிகளில் இருப்போர், 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையை சேர்ந்த தேன்மொழி என்பவர் கணவரின் ஓய்வூதிய பலன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். government employees 2nd marriage...madurai high court

மேலும், ஓய்வூதிய பரிந்துரைக்கு வரும் ஆவணங்களை முறையாக சரிபார்த்து ஒப்புதல் வழங்கவேண்டும். மனுதாரரின் கணவர் ஒரு காவல் அதிகாரி. ஆனால், 2-வது திருமணம் செய்துகொள்வது குற்றம் என தெரிந்துகொண்டே தவறு செய்துள்ளார். இரண்டு திருமணங்களை புரிவது நன்னடத்தை ஆகாது. அது குற்றமும் கூட. government employees 2nd marriage...madurai high court

எனவே, அரசுப்பணிகளில் இருப்பவர்கள் முதல் மனைவி இருக்கும் போது 2-வது திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தேவைப்படும் பட்சத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்ய பரிசீலனை செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios