Asianet News TamilAsianet News Tamil

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல்..! தூக்கி வீசப்பட்டு மூவர் பலி..!

மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

3 killed in an accident near madurai
Author
Thirumangalam, First Published Jan 10, 2020, 4:49 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கும் சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன்(32). காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஜெயபாண்டி. இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் அழகாபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் அருகே இருக்கும் பாறைப்பட்டி வளைவு அருகே அவர்கள் வந்த போது அதே சாலையின் எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் வந்துள்ளது.

3 killed in an accident near madurai

அதில் போடியைச் சேர்ந்த கேசவன்(19), எத்தனராஜ்(21) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்திகை பாண்டியன் வந்த வாகனமும் கல்லூரி மாணவர்கள் வந்த வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். கார்த்திகை பாண்டியன், கேசவன் மற்றும் எத்தனராஜ் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர்.

3 killed in an accident near madurai

ஜெயபாண்டியன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios