Asianet News TamilAsianet News Tamil

இயல்பு நிலைக்கு திரும்பும் காஞ்சி !! நிறைவு பெற்ற பிரம்மாண்டமான அத்திவரதர் வைபவம் .. காஞ்சிபுரம் மக்கள் நிம்மதி பெருமூச்சு ..

48 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் கடந்த 17 ம் தேதியோடு நிறைவு பெற்றது . காஞ்சிபுரம் நகரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது .
 

kanchipuram returns to normal stage
Author
Tamil Nadu, First Published Aug 19, 2019, 4:23 PM IST

1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

kanchipuram returns to normal stage

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே  சென்றது  . 4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

இந்த நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றது  . ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர்  தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டு  விட்டார்  .

இந்த 48 நாட்களும் காஞ்சிபுரம் மாநகரமே குலுங்கி விட்டது . சராசரியாக ஒரு நாளைக்கு 4 லட்சம் பக்தர்கள் நகருக்குள் வந்து வெளியேறி இருக்கின்றனர் . போலீசாரின் கெடுபுடி அதிகம் இருந்தது .சோதனைச் சாவடிகள் அதிகளவில் இருந்தன . இதனால் உள்ளூர் மக்கள் அதிகம் பாதிப்படைத்தனர் . நகரமும் மாசு அடைந்தது .

kanchipuram returns to normal stage

தற்போது காஞ்சி நகரம் ,கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது . போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் தூய்மை படுத்தும் பணியில் துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் . இதனால் காஞ்சி மக்கள் 50 நாட்களுக்கு பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் .

Follow Us:
Download App:
  • android
  • ios