Asianet News TamilAsianet News Tamil

என்ன எதுவுக்கு டார்க்கெட் பண்றீங்க? யார் தடுத்தாலும் நடத்தியே காட்டுவேன்.. சவால் விடும் அன்னபூரணி.!

எல்லா ஆன்மிக குருமார்களும் நடத்தும் ஆன்மிக நிகழ்ச்சியை தான் நானும் நடத்திக் கொண்டிருக்கிறேன். என்னை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க? நீங்க அவதூறு பரப்புவதாலோ, என்னை டார்க்கெட் பண்ணுவதாலோ. என்னுடைய ஆன்மிக பணி நிற்காது. தொடர்ந்து நடைபெறும். 

energy darshan programme...Annapoorni will be challenged
Author
Tamil Nadu, First Published Mar 16, 2022, 1:16 PM IST

அன்னபூரணி தரிசன நிகழ்ச்சிக்கு நெருக்கடி காரணமாக ஆசிரம நிர்வாகம் தடை விதித்த நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன் என அன்னபூரணி சவால் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் அன்னபூரணி அரசு அம்மா எனும் சாமியார் தான். இவர் தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு பரவசத்தையும் ஏற்படுத்தினர்.  இதனையடுத்து,  எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று சந்தேகித்த சமூகவலைதளவாசிகள், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த அதே பெண்மணி தான் இந்த அன்னப்பூரணி என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, கொஞ்ச நாட்கள் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் அன்னபூரணி பார்முக்கு வந்துள்ளார். 

energy darshan programme...Annapoorni will be challenged

அம்மா எனர்ஜி தர்ஷன்

இந்நிலையில், திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில்  ‛அம்மா எனர்ஜி தர்ஷன்’ என்கிற பெயரில், ஏப்ரல் 3 ம் தேதி மிகப்பெரிய அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் போவதாக அறிவித்தார். இந்த முறை டிமாண்ட் கடுமையாக இருப்பதால், நபர் ஒருவருக்கு ரூ.700 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு முன்பதிவும் நடந்தது. 

திடீர் ரத்து

சென்னை சுதானந்த ஆசிரமத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த அருள் பாலிக்கும் வைபவத்தை இயற்கை ஒளி பவுன்டேசன் ஏற்பாடு செய்து வந்தது. இந்நிலையில், அன்னபூரணி நிகழ்ச்சி நடைபெறவிருந்த சுதானந்த் ஆசிரமத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிகிறது. அன்னபூரணி குறித்து அந்த ஆசிரம நிர்வாகிகளுக்கு ரகசிய தகவல்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து அந்த நிகழ்ச்சியை சுதானந்த ஆசிரம நிர்வாகம் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. ஆயினும் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட நாளில் தர்ஷன் நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன் என்றும் இடம் மட்டும் முன்பதிவு செய்தவர்களுக்கு ரகசியமாக குறுந்தகவல் அனுப்பப்படும் என்றும் வீடியோவில் சவால் விடும் வகையில் அன்னபூரணி தெரிவித்துள்ளார்.

energy darshan programme...Annapoorni will be challenged

இடம் மாற்றம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்;-ஏப்ரல் 3ம் தேதி நடைபெற இருக்கும் தர்ஷன் நிகழ்வு, அந்த தேதியில் சிறப்பாக நடைபெறும். இடம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட முகவரி, புக் செய்தவர்களின் ஆபிசில் இருந்து உங்களுடைய வாட்ஸ் ஆப் மொபைல் எண்ணுக்கு தனியாக அனுப்பி வைக்கப்படும். இடம் மாற்றப்பட்ட காரணத்தை கூறுகிறேன். எல்லா சமூக வலைதளத்தில் தவறான செய்தியை பரப்பி, என்னுடைய ஆன்மிக நிகழ்ச்சி நடத்தவிருந்த ஆசிரமத்திற்கு ஒரு அழுத்தம் கொடுத்து, என்னுடைய நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்பதற்காக நிர்பந்தம் கொடுத்துள்ளனர். அதனால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆன்மிகம் என்றால் என்னவென்று தெரியாமல், இப்படி செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தியானம் இருக்கு, ஆன்மிக உரை இருக்கு என தெளிவாக போட்டுள்ளேன். ஆனால், நான் அருள்வாக்கு சொல்லப் போவதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். 

நெருக்கடி

கடந்த காலமும் இல்லாமல், வருங்காலமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் நிகழ்காலத்தில் வாழ கற்றுக் கொண்டுத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஏன் அருள் வாக்கு கூற வேண்டும். என்னுடைய வேலை அருவாக்கு சொல்வதில்லை. பல ஆண்டு தவத்தில் கிடைக்காத ஆன்மிக பவரை, என்னுடைய ‛டிவைன்’ பவரால் அத்தனை ஆன்மிக அனுபவத்தையும் கொடுத்து, உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து, அமைதி, ஆனந்தத்திலும் நிலை பெய வைத்துள்ளேன். 

energy darshan programme...Annapoorni will be challenged

சவால் விடுத்த அன்னபூரணி

உங்களுக்கு ஆன்மிகம் என்றால் என்ன தெரியும்? எனது தினசரி வீடியோவை பாருங்கள். தினமும் போடும் பதிவுகளை பாருங்கள். சத்தியத்தை பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு புரியவில்லை என்றால் தவிர்த்துவிட்டு கடந்து போய்விடுங்கள். உண்மையான ஆன்மிக தாகம் உள்ளவர்களுக்காக நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எல்லா ஆன்மிக குருமார்களும் நடத்தும் ஆன்மிக நிகழ்ச்சியை தான் நானும் நடத்திக் கொண்டிருக்கிறேன். என்னை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க? நீங்க அவதூறு பரப்புவதாலோ, என்னை டார்க்கெட் பண்ணுவதாலோ. என்னுடைய ஆன்மிக பணி நிற்காது. தொடர்ந்து நடைபெறும். தர்ஷன நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவேன், ஆன்மிக தீட்சையும் தொடர்ந்து கொடுப்பேன். இதை யாரும் தடுக்க முடியாது. யாருக்காகவும் அது நிற்காது என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios