செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக அதிகரித்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக அதிகரித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் கொடூர கொரோனாவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக பெரும் உச்சத்தை எட்டி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எகிறி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203-ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதியதாக 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 661 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்து பாதிப்பில் 2வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் இருந்து வருகிறது.