கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வட மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசராணை மேற்கொண்டுள்ளனர்
கோவை தொண்டாமுத்தூர் பூலுப்பட்டி சிறுவாணி சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதிக்கு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21வயது இளைஞரான பைசுல் இஸ்லாம் என்பவரிடம் கஞ்சா போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
Add Asianetnews Tamil as a Preferred Source

அவரிடம் இருந்து, 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர் அதேபோல கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!
அதேபோல கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் மர்ம நபர்கள் குறித்து தகவல் கொடுக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் வாட்ஸ் ஆப் எண் தற்போது வழங்கப்பட்டுள்ளது
