Asianet News TamilAsianet News Tamil

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருகிறது அதிரடி மாற்றம்..! முறைகேட்டை தடுக்க புதிய சீர்திருத்தங்கள்..!

கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெறும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும்.

new changes in tnpsc exams
Author
Tamil Nadu, First Published Feb 7, 2020, 6:18 PM IST

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதை தடுப்பதற்காக தற்போது அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி பின்பற்றப்பட இருக்கிறது. புதிய சீர்திருத்த விபரங்கள்:

*ஒரே நபர் பல விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதை தடுக்கும் வகையில் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. 

*தேர்வு குறித்த அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு தேர்வர்களின் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.

*தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு மைய விருப்பமாக 3 மாவட்டங்களை தேர்வு செய்யலாம். தேர்வாளர்களுக்கு சிரமமில்லாத வகையில் தேர்வாணையமே மையங்களை ஒதுக்கும்.

* கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெறும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும்.

*நிரப்பப்பட்ட இடங்கள், மீதியிருக்கும் காலியிடங்கள் ஆகியவற்றின்  விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.

*தேர்வெழுத வரும் தேர்வாளர்கள் கைரேகை, ஆதார் ரேகையுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்படும்.

*தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைக் தடுப்பதற்காக உயர்ரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

Also Read: 276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios