Asianet News TamilAsianet News Tamil

விடாமல் குடைச்சல் கொடுக்கும் இபிஎஸ், அண்ணாமலை.. எகிறியடிக்க தயாரான முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

CM Stalin defamation case against EPS, Annamalai tvk
Author
First Published Mar 14, 2024, 1:00 PM IST

போதைப்பொருள் விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்புவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நான் அமைச்சராக மட்டும் இல்லைனா பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்! பிரதமருக்கு கொலை மிரட்டல் தாமோ அன்பரசனுக்கு சிக்கல்!

CM Stalin defamation case against EPS, Annamalai tvk

அதில் போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மார்ச் 8-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வரான என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதே விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

CM Stalin defamation case against EPS, Annamalai tvk

தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios