World Badminton Championship Women division pv sindhu advanced

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது 2-வது சுற்றில் தென் கொரியாவின் கிம் ஹியோ மின்னை எதிர்கொண்டார்.

இதில், 21-16, 21-14 என்ற செட் கணக்கில் கிம் ஹியோ மின்னை தோற்கடித்து வெற்றிப் பெற்றார் சிந்து.

சிந்து தனது அடுத்த சுற்றில், ரஷியாவின் எவ்ஜினியா கொஸட்ஸ்கயா அல்லது ஹாங்காங்கின் செங் கான் யீயை சந்திக்கவுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் ஹாங்காங்கின் வெய் நானுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் சாய் பிரணீத் 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவர் தனது 2-வது சுற்றில், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகாவை சந்திக்கவுள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை தனது முதல் சுற்றில், இந்தியாவின் பிரஜக்தா சாவந்த் - மலேசியாவின் யோகேந்திரன் கிருஷ்ணன் இணையுடன் மோதியதில் 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸை எதிர்கொண்ட, ஃபின்லாந்தின் ஆய்ரிமிக்கெல்லா காயம் காரணமாக விலகியதை அடுத்து ரிதுபர்னா வென்றதாக அறிவிக்கப்பட்டார்.