We waited for 22 years to ride the World Cup - Sachins glory
உலகக் கோப்பையை கையில் ஏந்தி வலம் வர 22 ஆண்டுகள் காத்திருந்தோம் என்று 2006 முன்னாள் இந்திய கேப்டனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
முன்னாள் இந்திய கேப்டனான சச்சின் டெண்டுல்கர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “2006 முதல் 2007 உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டம். 2007-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 'சூப்பர்-8' சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறவில்லை.
எனினும் பின்னர் அதிலிருந்து மீண்ட இந்திய அணி புதிய சிந்தனைகளோடு, புதிய வழியில் பயணிக்க ஆரம்பித்தது. ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டன. ஓர் அணியாக இணைந்து சாதிக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டோம். அதற்கேற்ப அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடினோம். அதன் காரணமாக வெற்றி எங்கள் வசமானது.
இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ்ந்தபோது, அது சரியா? தவறா? என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதற்கான பலன் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. வெற்றிக்காக நாங்கள் காத்திருந்தோம்.
அற்புதமான உலகக் கோப்பையை நான் கையில் ஏந்தி வலம் வருவதற்கு 22 ஆண்டுகள் ஆனது” என்று அவர் தெரிவித்தார்.
