சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்…
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று நடைபெற்றது.
இதில், ஜப்பானின் அயாவ்ஹோரியுடன் மோதினார் இந்தியாவின் சிந்து.
இருவருக்கும் இடையே 40 நிமிடங்கள் ஆட்டம் நடைபெற்றது.
ஆட்டத்தின் முடிவில் 21-14, 21-15 என்ற செட் கணக்கில் அயாவோரியை வீழ்த்தி சிந்து வெற்றிப் பெற்றார்.
அடுத்து நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொள்கிறார்.