Thailand Open Grand Prix Gold Patmundan Saina Sai Progress

தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் ஜப்பானின் ஹருகோ சுஸுகி மோதினர்.

இதில் 21-15, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் சுஸுகியைத் தோற்கடித்தார் சாய்னா.

சாய்னா தனது அரையிறுதியில் தாய்லாந்தின் புஸானன் ஆங்பம்ருங்பானுடன் மோதுகிறார்.

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சாய் பிரணீத், தாய்லாந்தின் கன்டப்பான் வாங்சரோன் மோதியதில் 21-16, 21-17 என்ற நேர் செட்களில் வாங்சரோனை தோற்கடித்தார் சாய் பிரனீத்.

சாய் பிரணீத் தனது அரையிறுதியில் தாய்லாந்தின் பன்னாவிட் தோங்நுயாமுடன் மோதுகிறார்,