டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!
டென்மார்க்கில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றுள்ளார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி டென்மார்க்கின் ஹில்லராட் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. இதில், முதல் நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, டென்மார்க்கின் ஹோல்ஹர் ரூனேவை எதிர்கொண்டார். இதில், 2-6, 2-6 என்ற நேர்செட் கணக்கில் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அவசர மீட்டிங்.. பஹ்ரைன் பறந்த ஜெய் ஷா..!
இதன் மூலம், 0-1 என்ற கணக்கில் இந்தியா பின் தங்கியது. இதையடுத்து, நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான சுமித் நாகல், டென்மார்க்கின் ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் மோதினார். கிட்டத்தட்ட 2 மணிநேரம் 27 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் சுமித் நாகல் 4-6 என்று முதல் செட்டை கோட்டை விட்ட நிலையில் சுதாரித்துக் கொண்டு ஆடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சுமித் நாகல் தொடரை 1-1 என்று சமன் செய்தார். இதையடுத்து இன்று நடக்கும் இரட்டையர் பிரிவு மற்றும் ரிவர்ஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றால் டென்மார்க் டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 2 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்
இந்த வெற்றி குறித்து பேசிய சுமித் நாகல் கூறியிருப்பதாவது: நீல நிற ஜெர்சி அணிந்து தாய் நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு தனி உணர்வு தான். நீண்ட தூர பயணத்தில் சிறிய படி. நாங்கள் மீண்டும் செல்கிறோம்! என்று பதிவிட்டுள்ளார்.