டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நாளை நடக்கும் பிரியாவிடை போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா டென்னிஸ் வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்தார். கடந்த மாதம் துபாயில் நடந்த சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். அதில், இரட்டையர் மகளிரி பிரிவில் அமெரிக்க வீராங்கனை மெடிசின் கி உடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.
9 சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டு 6 சாதனைகளை தகர்த்த தமிழக மாணவிகள்!
இதில் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்த சானியா மிர்சா ஜோடி தொடரிலிருந்து வெளியேறியது. அதுமட்டுமின்றி டென்னிஸ் வாழ்க்கையிலிருந்தும் விடை பெற்றார். தனது 20 வருட டென்னிஸ் வாழ்க்கையில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் விளையாட்டிற்கு அடையாளமாக திகழ்ந்த சானியா மிர்சா இன்னும் சில ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியிருக்கலாம் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. எனினும், டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
சனி மஹா பிரதோஷம்: எம்பெருமான் ஈசனை தரிசனம் செய்த கோலி - அனுஷ்கா சர்மா!
இந்த நிலையில், சானியா மிர்சா தனது பிரியாவிடை போட்டியில் விளையாடுகிறார். நாளை காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் நடக்கும் பிரியாவிடை டென்னிஸ் போட்டியில் தனது உள்ளூர் ரசிகர்களுக்காக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்ற சானியா மிர்சா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக களமிறங்குகிறார்.
ஷேன் வார்னின் முதலாமாண்டு நினைவு தினம்: வார்ன் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்தின் வீடியோ
