Asianet News TamilAsianet News Tamil

சானியா மிர்சாவை ஏமாற்றிய ஷோயப் மாலிக்.. அதிகாரப்பூர்வமாக விவாகரத்து..?

ஷோயப் மாலிக் - சானியா மிர்சா தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 

sania mirza and shoaib malik officially divorced says reports
Author
First Published Nov 10, 2022, 2:45 PM IST

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இருபெரும் விளையாட்டு பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது.

ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 124 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். நடப்பு டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக்கை எடுக்காதது கூட சர்ச்சையானது.

டி20 உலக கோப்பை: அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து..! சீனியர் வீரரை தூக்கி எறிந்த இந்திய அணி

சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. 6 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர் சானியா மிர்சா. இந்திய விளையாட்டின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷோயப் மாலிக்கை திருமணம் செய்தது பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது.

ஷோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடிக்கு இஷான் என்ற ஆண் குழந்தை உள்ளது. 2018ம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தது. 

அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில், சானியா மிர்சா - ஷோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகவும், அவர்களது மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது.

T20 WC: ஒற்றை கேட்ச்சால் மொத்த மேட்ச்சும் போச்சு..! மோசமான ஃபீல்டிங்கால் அரையிறுதியில் தோற்ற நியூசிலாந்து

சானியா மிர்சாவுக்கு ஷோயப் மாலிக் துரோகம் செய்து ஏமாற்றியதுதான் இந்த பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. சானியா மிர்சாவை திருமணம் செய்வதற்கு முன்பாக, ஆயிஷா என்ற பெண்ணை ஏற்கனவே ஷோயப் மாலிக் திருமணம் செய்திருக்கிறார். இந்த விஷயத்தை சானியா மிர்சா தெரிந்துகொண்டதுதான் பிரிவுக்கு காரணம். அதை சானியா மிர்சா அறிந்ததில் இருந்தே ஷோயப் மாலிக்கை பிரிந்துதான் வாழ்ந்துவருகிறார். இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios