Royal Challengers Bangalore win by 14 runs

நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அபாரமாக பந்து வீசி, 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை 7 ஆட்டங்களில் மும்பை மற்றும் பெங்களுர் அணிகள் விளையாடியுள்ளன. நேற்றைய ஆட்டத்துடன் சேர்த்து, மேலும் 7 ஆட்டங்களே மீதம் உள்ளன. இவற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதனால் இந்த ஆட்டத்தில் தோல்வியால், பிளே-ஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினம். இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதியது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்களில் வென்றது. அதனால் நேற்றைய ஆட்டத்திலும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியது மும்பை.



168 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பையின் டுமினி 23, குருணால் பாண்டயா 23 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் 50 ரன்கள் எடுத்து போராடி வந்த ஹார்திக் பாண்டயா அவுட்டானார். இதன் மூலம் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது. பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ், டிம் சைதி, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.