வம்புக்கு வந்த கம்மின்ஸ்.. ஒதுங்கிப்போன ரிஷப் பண்ட்!! வீடியோ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே பரபரப்புக்கும் மோதலுக்கும் பஞ்சமே இருக்காது. எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது, ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை வீழ்த்த நினைப்பது எல்லாம் ஆஸ்திரேலிய அணியின் வியூகங்களில் ஒன்று.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று தொடங்கி நடந்துவருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே பரபரப்புக்கும் மோதலுக்கும் பஞ்சமே இருக்காது. எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது, ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை வீழ்த்த நினைப்பது எல்லாம் ஆஸ்திரேலிய அணியின் வியூகங்களில் ஒன்று. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே முட்டும் மோதலுமாக இருக்கும்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சற்றும் சளைக்காத சண்டக்கோழி நம்ம கேப்டன் கோலி. எனவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடியே தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங் செய்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோலி அளித்த பேட்டி, ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் எகிறவிட்டது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு, ரசிகர்கள் மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் மீட்டெடுப்பதற்காக முன்புபோல் ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடக்கூடாது என்று முடிவெடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அடையாளமான ஸ்லெட்ஜிங்கை விட்டுவிடக்கூடாது என்று பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே பெரும் கவனத்தை ஈர்த்தது ஸ்லெட்ஜிங் குறித்த விஷயம்தான். அப்படி இருக்க, நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய அவரிடம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் சில வார்த்தைகளை வேண்டுமென்றே உதிர்த்தார். ரிஷப் பண்ட்டை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தார். ஆனால் அதை ரிஷப் பண்ட் சற்றும் பொருட்படுத்தவேயில்லை. கம்மின்ஸின் வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்தார் ரிஷப் பண்ட்.
Cummins v pant pic.twitter.com/qMir1FkGui
— Prem Chopra (@premchoprafan) December 6, 2018
ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று சீனியர் வீரர்கள் சொல்லித்தானே கூட்டி வந்திருப்பார்கள்.