Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுடெல்லி,

மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் சுனிலும், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மன்பிரீத்சிங்கும் ஆசிய சாம்பியன்ச் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டியில் விலக முடிவெடுத்துள்ளனர்.

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் வலைகோல் பந்தாட்ட (ஆக்கி) போட்டி மலேசியாவில் வருகிற 20–ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய வலைகோல் பந்தாட்ட அணியில் இடம் பிடித்து இருந்த முன்கள வீரர் எஸ்.வி.சுனில், நடுகள வீரர் மன்பிரீத்சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

27 வயதான சுனில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தாலும், 24 வயதான மன்பிரீத்சிங் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாகவும் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.

சுனிலுக்கு பதிலாக ரமன்தீப்சிங்கும், மன்தீப்சிங்குக்கு பதிலாக ஆகாஷ்தீப்சிங்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.