பாரா ஷூட்டிங் உலக கோப்பையில் இந்தியாவிற்கு மனீஷ் நார்வால் - ருபினா ஃப்ரான்சிஸ் ஜோடி தங்கம் வென்று கொடுத்துள்ளது. 

ஜெர்மனியின் முனிச் நகரில் பாரா துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பை தொடர் நடந்தது. இந்த உலக கோப்பையில் 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் நிஷா கன்வார் வெண்கல பதக்கம் வென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனிஷ் நார்வால் - ருபினா ஃப்ரான்சிஸ் இணை, ஈராக்கின் மூசா அலி - சாரா அல் ஷப்பானி ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. 

இதையும் படிங்க - உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 90மீ தூரம் கண்டிப்பா எறிவேன்..! இந்திய ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா சபதம்

நல்ல ஃபார்மில் இருந்த இந்தியாவின் மனிஷ் நார்வால் 90.3 புள்ளிகளையும், ருபினா ஃப்ரான்சிஸ் 83.7 புள்ளிகளையும் பெற, இந்தியாவின் மனிஷ் - ருபினா ஜோடி 170 புள்ளிகளை பெற்றது. ஈராக்கின் மூசா - சாரா ஜோடி 166 புள்ளிகளை பெற்று தோற்றது.

இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

170 புள்ளிகளை பெற்று ஃபைனலில் வெற்றி பெற்ற இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடி மனிஷ் நார்வால் - ருபினா ஃப்ரான்சிஸ் பாரா ஷூட்டிங் உலக கோப்பையில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தனர்.

Scroll to load tweet…