Maharashtra Open Tennis India Yuki Bhambri advanced to next level

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சகநாட்டவரான அர்ஜுன் காதேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அர்ஜுன் காதேவை எதிர்கொண்டார் யூகி பாம்ப்ரி. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், சகநாட்டவரான அர்ஜுன் காதேவை வீழ்த்தினார்.

இன்று நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பி.ஹெச்.ஹெர்பெர்டை எதிர்கொள்கிறார் யூகி.

இதனிடையே, மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இவாஷ்காவை எதிர்கொண்டார் சுமித் நாகல்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் இவாஷ்கா கைப்பற்றினார். அதற்கு அடுத்த செட்டையும் அவர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால், நாகல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.