Indias HS pranai defeated by the Korean player

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், கொரிய வீரர் ஜியோன் ஹியோக் ஜின்னிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டி கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் மற்றும் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின் மோதினர்.

இதில், 21-17, 14-21, 13-21 என்ற செட் கணக்கில் ஜியோன் ஹியோக் ஜின்னிடம் தோல்வி கண்டார் எச்.எஸ்.பிரணாய். இதன்மூலம் போட்டியிலிருந்து வெளியேறினார் பிரணாய்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான கரண் ராஜன் 18-21, 14-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கோகி வாடானேப்பிடம் தோல்வி கண்டார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை இந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-17, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சோய் சோல்கியூ-ஜீ வான் கிம் இணையைத் தோற்கடித்தது. இதன்மூலம் இந்திய இணை காலிறுதிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா - சிக்கி ரெட்டி இணை தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-11, 21-17 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் டபேலிங்-செரில் சினென் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.