- Home
- Sports
- Sports Cricket
- Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?
Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?
Rohit Sharma Retirement: இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் சொன்ன ஒரு விஷயத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கல் கூறுகின்றன.

இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ தொடர்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஓடிஐ தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா நிர்ணயித்த 234 ரன்கள் இலக்கை அந்த அணி 44 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் விராட் கோலி (65), ஷ்ரேயாஸ் ஐயர் (66) அரைசதம் அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 47 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இங்கிலாந்து தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?
இந்த நிலையில், லார்ட்ஸில் ஜூலை 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஓடிஐ போட்டியுடன் ஓடிஐ பார்மட்டிலும் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தேசிய ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பிசிசிஐ தேர்வுக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரோகித் சர்மாவை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்ய வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து கடந்த வாரம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள் ரோகித்திடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.
கம்பீர் சொன்ன வார்த்தையால் ரோகித் சர்மா அதிருப்தி
இளம் திறமைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதே தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி இளம் வீரர்களுக்கு தொடக்க வீரராக நிரந்தர வாய்ப்பு அளித்து, அடுத்த உலகக் கோப்பைக்கு ஒரு வலுவான அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடர விரும்பினாலும், இந்த முடிவு அவருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் மோசம்
ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதுடன் அந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, 2025 மே மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். ஏற்கெனவே ஒருநாள் கேப்டன் பதவியை சுப்மன் கில்லிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். இப்போது, கடைசியாக இருந்த ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் வெளியேறும் நேரம் வந்துவிட்டது.
இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் தேர்வாளர்களின் இந்த முடிவுக்கு வலு சேர்த்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அவர் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். களத்தில் பந்துகளை எதிர்கொள்ள அவர் திணறுவதும், வேகமாக ரன் குவிக்க முடியாததும், அவரது வயது மற்றும் வேகத்தை பாதித்துள்ளதா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி போட்டிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
மொத்தத்தில், லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டி, இந்திய கிரிக்கெட்டின் ஒரு அழகான சகாப்தத்தின் முடிவாக அமையலாம். கேப்டனாக இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ரோகித், தனது பேட் மூலம் பிரியாவிடை தருவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

