Asianet News TamilAsianet News Tamil

தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே ஒலிம்பிக் கிராமத்திலிருந்து நாட்டிற்கு புறப்பட்ட வினேஷ் போகத் - நாளை தீர்ப்பு!

தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து நாடு திரும்ப புறப்பட்ட வினேஷ் போகத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Indian Wrestler Vinesh Phogat Ready to Leaves Paris Games ahead of Disqualification and Silver Meadl CAS Verdict rsk
Author
First Published Aug 12, 2024, 10:12 PM IST | Last Updated Aug 12, 2024, 10:12 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வந்த 33ஆவது ஒலிம்பிக் தொடரானது நேற்றுடன் முடிவடைந்து நிறைவு விழா நடைபெற்றது. கடைசியாக ஒலிம்பிக் கொடியானது லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வழங்கப்பட்டது. இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் மகளிருக்கான மல்யுத்தம் 50கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத் எலிமினேஷன் சுற்று, காலிறுதி, அரையிறுதி என்று எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

தங்கம் ஜெயிச்ச பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கும் குவியும் கார்கள் – வாழ்நாள் முழுவதும் பெட்ரோல்/டீசல் இலவசம்

மறுநாள் நடைபெற இருந்த இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தால் கையில் தங்கப் பதக்கம் இருந்திருக்கும். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற உடல் எடை பரிசோதனையில் 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் போனது. இச்சம்வம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். வினேஷ் போகத் தன் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதுவும் பலனளிக்காததால் அவரது முடியை வெட்டியும், ஆடையை குறைத்தும் பார்த்துள்ளனர். அதுவும் பலனளிக்கவிலை என கூறப்படுகிறது.

ஒலிம்பிக்கில் சாதனை படைத்த தங்க மருமகனுக்கு எருமை மாடு பரிசளித்த மாமனார் – பாகிஸ்தான் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் இறுதியில் அந்த வழக்கின் தீர்ப்பு வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரி தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை வினேஷ் போகத்துக்கு சாதகமான தீர்ப்பு வெளியானால் இந்தியாவுக்கு கிடைக்கும் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவாக இருக்கும். இதற்கு முன்னர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்த நீரஜ் சோப்ராவின் ஒமேகா வாட்ச் – விலை, சிறப்பம்சம் என்ன?

இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடர் முடிவடைந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து நாட்டிற்கு புறப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மல்யுத்தம் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios