Indian football team capture the intercontinental trophy

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பையில் நடந்தது. 

வரும் 2019 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் கென்யா, நியூஸிலாந்து, சீன தைபே அணிகள் இதில் கலந்து கொண்டன. 

அதன்படி, நேற்று நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் - கென்யாவும் மோதின. தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 

கேப்டன் சுனில் சேத்ரி அபாரமாக ஆடி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன்மூலம் இறுதியில் 2-0 என கென்யாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

உலகின் இரண்டாவது அதிக கோலடித்த வீரராக திகழும் சேத்ரி, பிரபல வீரர் மெஸ்ஸியின் 64 கோல்கள் அடித்த சாதனையையும் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் இந்த போட்டியில் தனது 100-வது ஆட்டதிலும் பங்கேற்று விளையாடினார் என்பது கொசுறு தகவல்.