ஜப்பானில் இன்று நடந்த சீகோ கோல்டன் கிராண்ட் பிரிக்ஸில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்லி சிங் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை 

ஜப்பானில் கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் நடந்துவருகின்றன. இன்று நடந்த நீளம் தாண்டுதலில் இந்தியாவின் இளம் நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங் 3ம் இடம்பிடித்து சாதனை படைத்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஷைலி சிங் 6.65 மீ தூரம் தாண்டினார். 6.59 மீ, 6.35 மீ, 6.36 மீ, 6.41 மீ தூரங்களையும் தாண்டினார் ஷைலி சிங். அவர் தாண்டியதில் 6.65 மீ தூரம் தான் அதிகம். 

ஜெர்மனி தடகள வீராங்கனை மரைஸ் லூஸியோ 6.79 மீ தூரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை ப்ரூக் 6.77 மீ தூரம் தாண்டி வெள்ளி வென்றார்.

6.65 மீ தூரம் தாண்டிய இந்திய வீராங்கனை ஷைலி சிங் 3ம் இடம்பிடித்து வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

Germany’s Maryse Luzolo won the gold medal with an effort of 6.79m while Australia’s Brooke Buschkuehl bagged the silver medal with a 6.77m leap.