பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதன்முறையாக இறுதிச் சுற்றில் கால்பதித்தார் டொமினிக் தீம்...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே மகளிர் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப் - ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இதனிடையே நேற்று ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும், இத்தாலியின் மார்கோ சென்சினாட்டோவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் டொமினிக் தீம் 7-5, 7-6, 6-1 என்ற நேர் செட்களில் மார்கோவை வீழ்த்தி முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பிரெஞ்ச் ஓபனில் இறுதிக்கு முன்னேறிய மிகவும் இளம் வயது வீரர் என்ற சாதனையை தீம் செய்துள்ளார்.
ரபேல் நடால் - டெல் பெட்ரோ ஆகியோர் இடையே நடைபறும் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவருடன் இறுதிச் சுற்றில் தீம் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.