Asianet News TamilAsianet News Tamil

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்ல.. அலார்ட்டான தோனி!!

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் எல்பிடபிள்யூ இல்லாததை அவுட் என அம்பயர் சொல்லியதால் இருவரும் தேவையில்லாமல் வெளியேற வேண்டியதாயிற்று. 

dhoni indirectly revealed the discontent with umpire decisions
Author
UAE, First Published Sep 26, 2018, 1:45 PM IST

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி ஏற்கனவே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த தொடரில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அகமது, சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். கேப்டன் ரோஹித்தும் துணை கேப்டன் தவானும் இல்லாததால் கேப்டன்சியை தோனி கவனித்துக்கொண்டார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 252 ரன்களை எடுத்தது. 253 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி டிரா செய்தது. 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜடேஜா தூக்கி அடித்து அவுட்டானார். இதையடுத்து போட்டி டிரா ஆனது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் எல்பிடபிள்யூ இல்லாததை அவுட் என அம்பயர் சொல்லியதால் இருவரும் தேவையில்லாமல் வெளியேற வேண்டியதாயிற்று. ரிவியூவும் இல்லாததால் இருவரும் வேறுவழியின்றி அதிருப்தியுடன் வெளியேறினர். மேட்ச்சை வெற்றியை நோக்கி அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக், அம்பயரின் தவறான முடிவால் 44 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் போட்டி தலைகீழாக மாறியது. தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டிற்கு பிறகு போட்டி ஆஃப்கானிஸ்தான் பக்கம் திரும்பியது.

dhoni indirectly revealed the discontent with umpire decisions

தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் அம்பயர் தவறாக அவுட் கொடுத்ததும் இந்திய அணி வெற்றி பெற முடியாததற்கு ஒரு காரணம். இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய தோனி, அம்பயர்கள் தவறான முடிவு கொடுத்தது தொடர்பாக கருத்து தெரிவித்து அபாரதம் செலுத்த தான் விரும்பவில்லை என தெரிவித்தார். அம்பயரின் முடிவை விமர்சிக்காமல் அதேநேரத்தில் அதுதொடர்பான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார் தோனி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios