Asian Athletics Championship Manfred Kaur won gold on her birthday
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மற்றும் பிறந்தநாளில் இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கெளர் தங்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடக்கி வைத்தார்.
அவருக்கு அடுத்தபடியாக ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் விகாஸ் கெளடா வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்-22 ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நேற்றுத் தொடங்கியது.
இதில் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் மன்பிரீத் கெளர் 18.28 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார் வெற்றி பெற்றார். அவருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே பிரிவில் நடப்புச் சாம்பியனாக இருந்த சீனாவின் குவோ டியாகியான் 17.91 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் அயா ஓட்டா 15.45 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
தங்கம் வென்ற மன்பிரீத் கெளர், ஆகஸ்ட் மாதம் இலண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் விகாஸ் கெளடா 60.81 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தப் பிரிவில் ஈரானின் இஷான் ஹத்தாதி 64.54 மீ தூரம் எறிந்து தங்கத்தையும், மலேசியாவின் முகமது இர்ஃபான் 60.96 மீ தூரம் எறிந்து வெள்ளியையும் கைப்பற்றினர்.
