ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. 5 சிறந்த வீரர்களை கைவிட்டதால் அந்த அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.  

IPL Rajasthan Royals: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஐபிஎல் 2025 ஒரு கனவாகவே முடிந்துவிட்டது. அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்று, 8ல் தோல்வியைத் தழுவியது. இந்த சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு அணி முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பிறகு, டாப் 4 பந்தயத்தில் இருந்து வெளியேறிய இரண்டாவது அணியாக ஆர்ஆர் மாறியுள்ளது. அணியின் சில பெரிய குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 18வது சீசனில் இதுவரை பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் செய்த மிகப்பெரிய தவறு இப்போது விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் டிராவிட் ஏலத்தில் இருந்தபோது, அணிக்கு நல்ல பங்களிப்பை வழங்கிய 5 முக்கிய வீரர்களை ராஜஸ்தான் விடுவித்தது. இப்போது அதே வீரர்கள் மற்ற அணிகளுக்குச் சென்று வெற்றிகளைப் பெற்றுத் தருகின்றனர். அந்த ஐந்து வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. பிரசித் கிருஷ்ணா

வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கடந்த சீசன் வரை ராஜஸ்தான் ராயல்ஸில் விளையாடினார். 2022ல் 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸில் விளையாடும் பிரசித் கிருஷ்ணா, 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளுடன் ஊதா நிறத் தொப்பி பந்தயத்தில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அவர் மீது ரூ.9.50 கோடி செலவிட்டது, அதன் பலனையும் அவர்கள் அனுபவிக்கின்றனர். ஆனால் ஆர்ஆருக்கு இது நஷ்டமாகிவிட்டது.

Scroll to load tweet…

2. ஆவேஷ் கான்

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லக்னோ அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸில் 16 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனாலும் அவரைத் தக்கவைக்கவில்லை. இப்போது லக்னோவுக்காக ஒரு முக்கியமான போட்டியில் அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக வெற்றி பெற்றுத் தந்தார். 

Scroll to load tweet…

3. டிரெண்ட் போல்ட்

மூன்றாவதாக டிரெண்ட் போல்ட், இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸில் சிறப்பாகப் பந்து வீசினார். ராஜஸ்தான் வெளியேற்றிய போட்டியில் போல்ட் முக்கிய பங்கு வகித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 3 சீசன்களாக ராஜஸ்தானில் நன்றாக விளையாடிய போல்ட்டை அந்த அணி விடுவித்தது. பின்னர் மும்பை அவரை ரூ.12.5 கோடிக்கு வாங்கியது.

Scroll to load tweet…

4. யுஸ்வேந்திர சாஹல்

நான்காவதாக ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2025ல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் கிங்ஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சீசன் வரை ராஜஸ்தானில் இருந்த சாஹலை, மெகா ஏலத்தில் அந்த அணி தவறவிட்டது. பின்னர் பஞ்சாப் அவரை ரூ.18 கோடிக்கு வாங்கியது. இப்போது பலன் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது.

Scroll to load tweet…

5. ஜோஸ் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸின் மிகப்பெரிய பலவீனம் பேட்டிங்தான். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய பங்களிப்பை வழங்கவில்லை. ஜோஸ் பட்லரின் இழப்பு அந்த அணிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பட்லரைத் தக்கவைக்க ராஜஸ்தான் மறுத்ததால், குஜராத் டைட்டன்ஸ் அவரை ரூ.15.75 கோடிக்கு வாங்கியது. இப்போது பட்லர் குஜராத்துக்காக பல பெரிய இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். 9 போட்டிகளில் 416 ரன்கள் எடுத்து ஆரஞ்சு நிறத் தொப்பி பந்தயத்தில் உள்ளார். அவரது பல முக்கிய இன்னிங்ஸ்கள் அணியை டாப் 4ல் வைத்திருக்க உதவியுள்ளன.

Scroll to load tweet…