Asianet News TamilAsianet News Tamil

IPL 2022: இந்த சீசனில் அந்த அணி தான் கோப்பையை ஜெயிக்கணும்..! சுரேஷ் ரெய்னா கருத்து

ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணிதான் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார்.
 

suresh raina wants rcb to win title of ipl 2022 because of virat kohli
Author
Chennai, First Published May 24, 2022, 4:55 PM IST

ஐபிஎல்லில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை  இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்த அணிகள் எல்லாம் ஐபிஎல்லில் டைட்டில் வெல்வதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், ஆர்சிபி அணிக்கு மட்டும் அது கைகூடவே இல்லை.

விராட் கோலி - டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அணியில் இருந்தும் ஆர்சிபியால் ஒருமுறை கூட  கோப்பையை வெல்ல முடியாதது துரதிர்ஷ்டவசமானது. 

ஐபிஎல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடிவரும் விராட் கோலி 221 போட்டிகளில் ஆடி 6592 ரன்களை குவித்துள்ளார். அவர் 10 ஆண்டுகள் ஆர்சிபியை வழிநடத்தியும், அதில் ஒரு சீசனில் கூட ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாதது அவரது ஐபிஎல் கெரியரில் ஒரு கரும்புள்ளி தான்.

ஆனால் ஐபிஎல்லில் ஒருமுறையாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் உள்ள விராட் கோலிக்கு ஃபாஃப் டுப்ளெசிஸின் கேப்டன்சியில் அது கைகூடுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த சீசனில் டுப்ளெசிஸ் தலைமையில் ஆடிவரும் ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. இந்த சீசனில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளும் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

இதில் ஆர்சிபி அணி தான் கோப்பையை வெல்லவேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். விராட் கோலிக்காக ஆர்சிபி அணி தான் இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரெய்னா கூறியுள்ளார்.
 
விராட் கோலி மாதிரியான ஒரு பெரிய சாம்பியன் பிளேயர் கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமும் கூட.
 

Follow Us:
Download App:
  • android
  • ios