ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிகப்பெரிய கேம் சேஞ்சர் என்று சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.
பேட்டிங், பவுலிங்கில் பாண்டியா அசத்தியது பெரிய விஷயமல்ல. ஆனால் கேப்டன்சி அனுபவமே இல்லாத பாண்டியா, இந்த சீசனில் முதிர்ச்சியுடனும் பக்குவத்துடனும் தெளிவான கேப்டன்சி செய்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஆக்ரோஷமான குணாதிசயத்தை கொண்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட நிலையில், அவரது உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தவில்லை. அமைதியாக, நிதானமாகவே செயல்பட்டார்.
களவியூகம், வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப், கேரக்டர் என அனைத்திலுமே ஒரு தேர்ந்த கேப்டனாக தெரிந்தார். ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனுக்கான ரேஸில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருக்கும் நிலையில், அவர்களை ஓவர்டேக் செய்து ஹர்திக் பாண்டியா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
அந்தளவிற்கு ஒரு கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டார். ஒரு கேப்டனாக முன்னாள் வீரர்கள் பலரையும் கவர்ந்தார் ஹர்திக் பாண்டியா. ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்திவருகின்றனர். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு மேலாக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் அசத்தும் ஆல்ரவுண்டராக மட்டுமல்லாது, இப்போது கேப்டன்சி மெட்டீரியலாகவும் உருவெடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா கேம் சேஞ்சர் என்றும், ஒரு ஆல்ரவுண்டராக அவரது இருப்பு அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும் என்றும் சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் மிகப்பெரிய கேம் சேஞ்சர் ஹர்திக் பாண்டியா. உலக கோப்பையில் மட்டுமல்ல; அவர் ஆடும் ஒவ்வொரு போட்டியிலுமே அவர் கேம் சேஞ்சர் தான். 5ம் வரிசையில் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் மிரட்டிவிடுவார். அவர் புதிய பந்தில் வீசுவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.
ஹர்திக் பாண்டியா மாதிரியான ஆல்ரவுண்டர் அணியில் இருப்பது, டி20 உலக கோப்பைக்கான அணியில் கூடுதல் ஸ்பின்னரை எடுக்கவோ அல்லது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை எடுக்கவோ வழிவகுக்கும். பாண்டியா மாதிரியான ஆல்ரவுண்டரின் இருப்பு, அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும் என்றார் கவாஸ்கர்.
