#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்..! இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. கொழும்பில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர். குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்து ஆடுகின்றனர்.
இந்திய அணி:
ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணி:
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா(விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, இசுரு உடானா, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தாகன்.