Asianet News TamilAsianet News Tamil

நான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் அவர் தான்..! சச்சின், லாரா, பாண்டிங்கையே அதிரவைத்த அக்தர்

தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் முத்தையா முரளிதரன் தான் என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
 

shoaib akhtar opines muttiah muralitharan is the toughest batsman he had bowled to
Author
Pakistan, First Published Jul 13, 2021, 4:23 PM IST

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர். 

தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டியவர் அக்தர். 

அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள அக்தர், சிறந்த பேட்ஸ்மேன்களையே தனது பவுன்ஸர்கள் மற்றும் மிரட்டலான பவுலிங்கால் தெறிக்கவிட்டவர். அப்படியிருக்கையில், எதிரணியின் டெயிலெண்டர்களை எப்படி மிரட்டியிருப்பார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

shoaib akhtar opines muttiah muralitharan is the toughest batsman he had bowled to

இந்திய டெயிலெண்டர்கள், தங்களது விக்கெட்டை வேண்டுமானால் வீழ்த்திக்கொள்ளுங்கள்; ஆனால் உடம்பில் தாக்கிவிட வேண்டாம் என்று கெஞ்சியதாக அக்தர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

அந்தவகையில், அதேமாதிரி கெஞ்சிய டெயிலெண்டரான முத்தையா முரளிதரன் தான், தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று கூறி சச்சின், லாரா, பாண்டிங், டிராவிட் ஆகிய ஜாம்பவான்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், நான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்றால் அது முத்தையா முரளிதரன் தான். என்னை கொன்றுவிடாதே என்று என்னிடம் கூறுவார். நீ(அக்தர்) பவுன்ஸரில் என்னை தாக்கினால் நான் செத்துவிடுவேன்; அதனால் பந்தை சாதாரணமாக பிட்ச் செய்து வீசு; நான் அவுட்டாகிவிடுகிறேன் என்பார். நானும், அவரட்து பேச்சை நம்பி வீசுவேன். அதை அடித்துவிட்டு, எதேச்சையாக அடித்துவிட்டேன் என்பார். எனவே முரளிதரன் தான் நான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று அக்தர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios