South Africa vs India: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென்னாப்பிரிக்கா வென்றது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.
முதல் ஒருநாள் போட்டி நாளை(ஜனவரி 19) நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்த ஒருநாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா, காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை. எனவே கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். கேஎல் ராகுலுடன் இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரேவில் அபாரமாக ஆடி 4 சதங்களுடன் அதிகமான ரன்களை குவித்திருந்தார் ருதுராஜ். எனவே அவருக்கு இந்த தொடரில் ரோஹித் சர்மா ஆடாததால் தொடக்க வீரராக ஆட வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும்.
3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஆல்ரவுண்டராக இளம் அதிரடி ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் ஆடுவார்கள் என்று தெரிகிறது.
உத்தேச இந்திய அணி:
கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது சிராஜ்.