ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 136 ரன்கள் அடித்து, 137 ரன்கள் என்ற எளிய இலக்கை திருச்சி அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் மதுரை பாந்தர்ஸும் ரூபி திருச்சி வாரியர்ஸும் ஆடிவருகின்றன.

சேலத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

அமித் சாத்விக், சந்தோஷ் ஷிவ், ஆதீக் உர் ரஹ்மான், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் (விக்கெட்கீப்பர்), சுகேந்திரன், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, அஜய் கிருஷ்ணா, எம்.ஏ.சஞ்சய், மதிவாணன்.

இதையும் படிங்க - WI vs IND: தம்பி நீங்க கிளம்புங்க.. 2வது ODI-க்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! இளம் வீரர் அறிமுகம்

மதுரை பாந்தர்ஸ் அணி:

அருண் கார்த்திக், வி ஆதித்யா, பாலசந்தர் அனிருத், சதுர்வேத் (கேப்டன்), ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), ஜெகதீசன் கௌசிக், சன்னி சந்து, பி சரவணன், கிரன் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி, ஆர் மிதுன்.

முதலில் பேட்டிங் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள் மிக சுமாராக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான அருண் கார்த்திக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஆதித்யா 34 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். பால்சந்தர் அனிருத் அதிரடியாக ஆடி26 பந்தில் 34 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - இதுதான் என்னோட லட்சியம்.. இந்திய அணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியா இருக்கேன் - விராட் கோலி

கௌசிக் 25 பந்தில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். அனைத்து வீரர்களுமே மந்தமாக பேட்டிங் ஆடியதால் மதுரை பாந்தர்ஸ் அணியின் ஸ்கோர் உயரவே இல்லை. 7ம் வரிசையில் இறங்கிய சன்னி சந்து 8 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 136 ரன்கள் அடித்த மதுரை பாந்தர்ஸ் அணி, 137 ரன்கள் என்ற எளிய இலக்கை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.