- Home
- Sports
- Sports Cricket
- இதுதான் என்னோட லட்சியம்.. இந்திய அணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியா இருக்கேன் - விராட் கோலி
இதுதான் என்னோட லட்சியம்.. இந்திய அணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியா இருக்கேன் - விராட் கோலி
இந்திய அணிக்கு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையை வென்று கொடுப்பதுதான் தனது லட்சியம் என்று விராட் கோலி தெரிவித்தார்.

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.
இதையும் படிங்க - WI vs IND: தம்பி நீங்க கிளம்புங்க.. 2வது ODI-க்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! இளம் வீரர் அறிமுகம்
ஐபிஎல்லில் சரியாக ஆடாத விராட் கோலி மீது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலும் சொதப்பினார். விராட் கோலி மீது கடும் விமர்சனங்களும் கடுமையான பார்வைகளும் முன்வைக்கப்பட்டாலும், கேப்டன் ரோஹித் சர்மாவும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது.
அடுத்ததாக ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை என அடுத்தடுத்து தொடர்ச்சியாக முக்கியமான ஐசிசி பெரிய தொடர்கள் இருக்கும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.
இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி ஆடவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடுகிறார்.
இந்நிலையில், மோசமான ஃபார்மிற்கு இடையில் தனது லட்சியம் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். இந்தியாவிற்கு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையை வென்று கொடுப்பதுதான் எனது லட்சியம். இந்திய அணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார் கோலி.
ஆசிய கோப்பையில் 14 போட்டிகளில் ஆடி 766 ரன்களை குவித்து, ஆசிய கோப்பையில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான விராட் கோலி, 2018 ஆசிய கோப்பையில் ஆடவில்லை. அந்த தொடரில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக செயல்பட்டார். ரோஹித்தின் கேப்டன்சியில் அந்த ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.