Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை 2019: இறுதி போட்டியில் இந்த 2 அணிகள் தான் மோதும்.. ஜாண்டி ரோட்ஸ் கணிப்பு

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
 

jonty rhodes predicts the finalists of world cup 2019
Author
England, First Published Jul 9, 2019, 1:59 PM IST

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது. 

jonty rhodes predicts the finalists of world cup 2019

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாண்டி ரோட்ஸ், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதி போட்டியில் மோதும் என்று தெரிவித்துள்ளார். 

jonty rhodes predicts the finalists of world cup 2019

ஜாண்டி ரோட்ஸின் கணிப்பு உண்மையானால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 2003க்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இறுதி போட்டியில் மோதும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios