Asianet News TamilAsianet News Tamil

#IPL2022 மெகா ஏலம் எப்போது? ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும்? முழு விவரம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் பிற்பாதியில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

ipl 2022 mega auction will may be conducted in december 2022 says reports
Author
Chennai, First Published Jul 5, 2021, 2:52 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.

ipl 2022 mega auction will may be conducted in december 2022 says reports

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

ipl 2022 mega auction will may be conducted in december 2022 says reports

மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு ஐபிஎல் தலா 4 வீரர்களை(2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 வெளிநாட்டு வீரர்) மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை கழட்டிவிட வேண்டும். மெகா ஏலம் வரும் டிசம்பர் இறுதியில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios