- Home
- Sports
- Sports Cricket
- Most Educated Cricketer: தோனி, கோலி, ரோகித் இல்ல.. அதிகம் படித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Most Educated Cricketer: தோனி, கோலி, ரோகித் இல்ல.. அதிகம் படித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Most Educated Cricketer: இந்திய கிரிக்கெட்டில் அதிகம் படித்த வீரர்கள் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா அல்ல. அப்படியானால் அதிகம் படித்த இந்திய வீரர் யார்? என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியாவின் அதிகம் படித்த கிரிக்கெட் வீரர் யார்?
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது நம்முடன் உணர்வில் கலந்த ஒன்று. அதனால் இந்தியா உலகக்கோப்பைகளில் வெற்றி பெற்ற உடன் வீரர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள், தோல்வி அடையும்போது கடும் விமர்சனம் செய்கின்றனர். இந்திய கிரிக்கெட்டில்
மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் செய்த சாதனைகளை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ரன் குவிக்கும் பந்தயத்தில் டாப்பில் இருக்கும் இவர்கள் படிப்பில் சற்று பின்தங்கிவிட்டனர். ஆனால், இந்திய அணியில் ஒரு வீரர் விளையாட்டு, படிப்பு இரண்டிலுமே சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்தான் இந்தியாவின் அதிகம் படித்த கிரிக்கெட் வீரர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார். உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஜொலிக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் இவர் முக்கியப் பங்காற்றினார். மேலும், மத்தியப் பிரதேச அணிக்காக ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார்.
கிரிக்கெட்டிலும் படிப்பிலும் முன்னோடி
கிரிக்கெட் களத்தில் ஒரு ஸ்டாராக இருக்கும் ஐயர், விரைவில் தனது பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என்ற பட்டத்தையும் சேர்க்கப் போகிறார். கடந்த சில ஆண்டுகளாக, அவர் நிதித்துறையில் (Finance) முனைவர் பட்டத்திற்காக (PhD) படித்து வருகிறார். இருப்பினும், அவர் இன்னும் அந்தப் பட்டத்தை முழுமையாக முடிக்கவில்லை.
வெங்கடேஷ் ஐயர் இதற்கு முன்பே நிதித்துறையில் MBA பட்டம் பெற்றுள்ளார். MBA முடித்த பிறகு, அவருக்கு புகழ்பெற்ற 'டெலாய்ட்' (Deloitte) நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், கிரிக்கெட்டில் தனது கரியரைத் தொடர வேண்டும் என்பதற்காக அந்த வேலையை அவர் ஏற்கவில்லை. அதுமட்டுமின்றி, இவர் CA தேர்வையும் கிளியர் செய்துள்ளார்.
ஐபிஎல்-இன் அதிக விலைமதிப்புள்ள வீரர்களில் ஒருவர்
வெங்கடேஷ் ஐயர் 2021-ல் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அப்போது வெறும் ₹20 லட்சம் அடிப்படை விலைக்கு KKR அணி அவரை எடுத்தது. தனது முதல் சீசனிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, KKR அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அடுத்த ஆண்டே, அவரது சம்பளத்தை ₹20 லட்சத்திலிருந்து ₹8 கோடியாக அந்த அணி உயர்த்தியது. இது சுமார் 3,900% உயர்வாகும்.
ஐபிஎல் மூலம் இதுவரை சம்பாதித்தது எவ்வளவு?
2025-ல் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை வாங்க பல அணிகள் போட்டியிட்டன. அந்த முறை, அவர் ₹23.75 லட்சத்திற்கு ஏலம் போனார். ஆனால், 2026 சீசனுக்கு முன்பு KKR அவரை விடுவித்தது. பின்னர், ₹7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் சேர்ந்தார். அவர் இதுவரை ஐபிஎல் மூலம் ₹55 கோடி சம்பாதித்துள்ளார்.

