Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து விராட் கோலி அதிரடி

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 
 

indian skipper virat kohli speaks about match against pakistan
Author
England, First Published Jun 14, 2019, 12:54 PM IST

உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டி வரும் 16ம் தேதி நடக்கவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. 

எனவே முதன்முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்துவது கடினம். இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டி. 

indian skipper virat kohli speaks about match against pakistan

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

indian skipper virat kohli speaks about match against pakistan

வரும் 16ம் தேதி இந்த முக்கியமான போட்டி நடக்கவுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் போட்டி குறித்து பேசினார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே முக்கியமான போட்டிதான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்துவோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்த பரபரப்புகள் புதிய வீரர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டி, இந்திய வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் என தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios