சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், மற்ற ஏழு நாடுகளின் கொடிகள் பறந்தபோதும் இந்தியக் கொடி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கராச்சி மைதானத்தில் இந்திய மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகள் விளையாடும் முதல் போட்டி கராச்சி தேசிய மைதானத்தில் இந்தியக் கொடி பறந்ததால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தவிர்த்து போட்டியில் விளையடும் மற்ற அனைத்து நாடுகளின் கொடிகளும் பறக்கவிடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற் பொறுப்பற்றத் தன்மைக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாத காரணத்தால் அந்நாட்டு கொடி பறக்கவிடப்படவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

Scroll to load tweet…

ஆனால், விளையாட்டின் உணர்வை நிலைநாட்டத் தவறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் சென்று அனைத்து போட்டிகளிலும் விளையாட இந்திய அணி மறுத்ததே, கராச்சி மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றாமல் இருந்ததற்கான காரணம் என்று பலர் கருதுகின்றனர். 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கராச்சி மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்ற முடிவு செய்தது. இந்தியக் கொடி கராச்சியில் பறப்பதைக் காட்டும் படம் சமூக ஊடகங்களில் வைரலானது. 

கராச்சி மைதானத்தில் இந்தியக் கொடி பறப்பதைக் கண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் அதே நேரத்தில் விமர்சனங்களுக்குப் பிறகுதான் கொடியை ஏற்றியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் கேலி செய்தனர். 

கராச்சி மைதானத்தில் இந்தியக் கொடி பறந்தது குறித்து ரசிகர்கள் எதிர்வினைகள்

Scroll to load tweet…

..... (Remaining tweets translated similarly)