Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தணும்னா இந்திய அணியில் அவங்க 2 பேரும் நல்லா ஆடணும்..! கம்பீர் அதிரடி

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி, ஜெயிக்க வேண்டுமென்றால் சீனியர் வீரர்களான ரோஹித்தும் கோலியும் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

gautam gambhir opines if india wants to beat pakistan in t20 world cup rohit sharma and virat kohli should play well
Author
Chennai, First Published Jul 17, 2021, 9:30 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும். 

அதிலும், ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எப்போதாவது மோதிக்கொள்கிறது என்பதால் இந்த போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

டி20 உலக கோப்பைக்கான க்ரூப் 1, க்ரூப் 2 பிரிவில் எந்தெந்த அணிகள் என்ற விவரத்தை வெளியிட்டது ஐசிசி. அதன்படி இந்தியாவும் பாகிஸ்தானும் க்ரூப் 2ல் இருப்பதால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அந்த போட்டி குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், நான் பாகிஸ்தானுக்கு எதிராக எனது முதல் போட்டியில் ஆடியபோது, மிகுந்த ஆர்வத்துடனும், அதே நேரத்தில் பதற்றத்துடனும் இருந்தேன். நிறைய போட்டிகளில் ஆடிய சீனியர் வீரர்களுடன் ஒப்பிடும்போது, நான் தான் அதிக பதற்றத்துடன் இருந்தேன்.

எனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும்போது இளம் வீரர்கள் ரிலாக்ஸாக ஆடவேண்டுமென்றால் சீனியர் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர் வீரர்கள் பொறுப்பை தங்களது தோள்களில் சுமந்து பொறுப்புடன் ஆட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios