Asianet News TamilAsianet News Tamil

கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. காரணத்துடன் கூறும் இங்கிலாந்து வீரர்

விராட் கோலியை விட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான் சிறந்த பேட்ஸ்மேன் என இங்கிலாந்து ஸ்பின்னர் அடில் ரஷீத் தெரிவித்துள்ளார்.
 

england spinner adil rashid picks babar azam is better batsman than virat kohli on current form
Author
England, First Published May 16, 2020, 10:01 PM IST

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, பேட்டிங்கில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தனது அபாரமான பேட்டிங்கால் சர்வதேச அளவில் பல பெரிய பெரிய ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் விராட் கோலி. 

விராட் கோலியை போலவே திறமையின் அடிப்படையில் பாபர் அசாமும் சிறந்த பேட்ஸ்மேன் தான். எதிர்காலத்தில் விராட் கோலியை போலவே பாபர் அசாமும் எதிர்காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக ஒரு ரவுண்டுவருவார் என பல முன்னாள் ஜாம்பவான்கள் நம்புகின்றனர். பாபர் அசாமை புகழ்ந்தும் வருகின்றனர். 

பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்றாலும், அவரை இப்போதே விராட் கோலியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவர் இப்போதுதான் அவரது கெரியரின் தொடக்கத்தில் இருக்கிறார். ஆனால் விராட் கோலியோ சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் மற்றும் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்காக வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

அதேபோலவே பாபர் அசாமும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். திறமையான பேட்ஸ்மேன்கள் பலர், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. எனவே பாபர் அசாம் இப்போது ஆடுவதை போலவே, இன்னும் 6 ஆண்டுகளுக்கு இடைவிடாது சிறப்பாக ஆடினால் தான் அவரை கோலியுடன் ஒப்பிட முடியும். 

இந்நிலையில், இங்கிலாந்து ஸ்பின்னர் அடில் ரஷீத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கோலி - பாபர் அசாம் ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அடில் ரஷீத், மிகவும் கடினமான கேள்வி. தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்து விளங்குகிறார். ஆனால் இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் தான். தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் மட்டுமே நான் பாபர் அசாம் பெயரை கூறியதாக அடில் ரஷீத் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios