Asianet News TamilAsianet News Tamil

ராணுவத்தில் இணைகிறார் தோனி ! இரண்டு மாதங்கள் பணிபுரிய திட்டம் !!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில்  இந்திய அணியில் தோனி இடம்பெற மாட்டார்  என தகவல் பரவிய நிலையில் தற்போது அவர் இரு மாதங்கள் ஓய்வில் துணை இராணுவத்தில் பணியாற்றவுள்ளதாக தெரிகிறது.

dhoni in militry
Author
Delhi, First Published Jul 21, 2019, 9:13 AM IST

உலகக் கோப்பைத் கிரிக்ட் தொடரில் தோனி சரியாக விளையாடவில்லை என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து  அவர்  தோனியின் ஓய்வு  அறிவிக்கப் போகிறார் என பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்கமாட்டார் என்ற கூறப்பட்டு வருகிறது. 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருப்பினும் 11 பேர் அணியில் தோனி இடம்பெறமாட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விளையாடுவார். இளம் வீரர் ரிஷப் பந்துக்கு தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார் என கூறப்பட்டது.

dhoni in militry

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகவுள்ள நிலையில் தோனி பங்கேற்கமாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தற்போது துணை  ராணுவப் படையில் அடுத்த 2 மாதங்கள் பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் பங்கேற்க முடியாது என தோனி பிசிசிஐக்கு கடிதம் எழுதி உள்ளார். 

dhoni in militry

இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் உள்ள தோனி நேரம் கிடைக்கும்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios