ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளிலுமே தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடுவதால் சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் வருகையால் டெல்லி அணி அசுரபலம் பெற்றுள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது. 

ஆர்சிபி அணியில் ஹர்ஷல் படேல் ஆடுவதால் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.